செய்யுளியல் - நூற்பா எண் 40 | 257 | | | படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் மருக ! - அடுதிறல் அழி நிமிர்தோள் பெருவழுதி ! எஞ்ஞான்றும் ஈரம் உடையையாய், என்வாய்ச் சொற்கேட்டி; உரிய உழவரை செஞ்சனுங்கக் கொண்டு வருங்கால் உழவர்க்கு மேளாண்மை செய்யல்; மழவர் இழைக்கும் வரைக்கால் நிதிஈட்டம் காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல்; அமைத்த அரும்பொருள் ஆறன்றி வௌவல்; இனத்தைப் பெரும்பொருள் ஆசையி னாற்சென்று; மன்றம் மறுக அகழாதி; - என்றும் மறப்புற மாக மதுரையார் ஓம்பும் அறப்புறம் ஆசைப்ப டேற்க ; - அறத்தால் அவையார் கொடுநாத் திருத்தி, - நவையாக நட்டார் குழிசி சிதையாதி; - ஒட்டார் செவிபுதைக்கும் தீய கடுஞ்சொல் - கவிபடைத்தாய்! கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகி, செற்றார்ச் செறுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதி; அற்றம் அறிந்த அறிவினாய்! - மற்றும் இவைஇவை வீயா தொழுகின், நிலையாப் பொருகடல் ஆடை நிலமகள் ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே' | | | - யா. கா. 36 மே. | | | எனவும் வரும். பிறவும் அன்ன. | (40) | விளக்கம் | புறநிலை வாழ்த்துச் சமனிலை மருட்பாவிற்குச் செய்யுள்: | | `அரசியல் கோடா தரனடியார்ப் பேணும் முரசியல் தானைவேல் மன்னர் - பரசோன் கழலிணை பொதுவில்காப் பாக, வழிவழி சிறந்து வாழியர் பெரிதே.' | | | - சி. சே. கோ. 81 | | | | |
|
|
|