|
கைக்கிளைப்பொருளதாகிய வியனிலைமருட்பாவிற்குச் செய்யுள்: |
| `பருந்தளிக்கும் முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி, விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும்; - திருந்த வலனுயர் சிறப்பின் மன்ற வாணன்அக் குலமுனி புதல்வனுக் கீந்த அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே.' | | | - சி. செ. கோ. 82 | | |
வாயுறை வாழ்த்து மருட்பாவிற்குச் செய்யுள் : |
| `வம்மின் நமரங்காள் ! மன்றுடையான் வார்கழல்கண்டு உய்ம்மின், உறுதி பிறிதில்லை, - மெய்ம்மொழிமற்று என்மொழி பிழையா தாகும்; பின்வழி நுமக்குப் பெரும்பயன் தருமே.' | | | - 83 | | |
செவியறிவுறூஉ மருட்பாவிற்குச் செய்யுள்: |
| `வாழ்த்துதின் தில்லை, நினைமின் மணிமன்றம், தாழ்த்துமின் சென்னி தலைவற்கு, - வீழ்த்த புறநெறி ஆற்றாது அறனெறி போற்றி, நெறிநின் றொழுகுதிர் மன்ற; துறைஅறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே.' | | | - 84 | | |
ஒத்த நூற்பாக்கள் |
| `மருட்பா ஏனை இருசார் அல்லது தான்இது என்னும் தனிநிலை இன்றே.' | | | - தொ. பொ. 937 | | |
| `புறநிலை வாயுறை செவியறி வுறூஉவென திறனிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப.' | | | - 473 | | |
| `வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.' | | | - 422 | | |