|
செந்துறைச்சிதைவுக்குறள் தாழிசைக்குச் செய்யுள்: |
| `அறுவர்க் கறுவரைப் பெற்றும் கவுந்தி மறுவறு பத்தினி போல்வையி னீரே' | | | - யா. கா. 27 மே. | | |
[இஃது உலகியலுக்கு மாறுபட்டிருத்தலின் செந்துறைச் சிதைவாயிற்று] |
எனவும், |
சந்தழி குறள் தாழிசைக்குச் செய்யுள்: |
| `வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள் பண்டையள் அல்லள் படி' | | | - யா. கா. 27 மே | | |
[வரிவளைக்கை - திருநுதலாள் - கலித்தளை] |
எனவும் வரும். பிறவும் அன்ன. | (41) |
விளக்கம் |
வெண்செந்துறைக்குச் செய்யுள் : |
| `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொன் மேருவுக் கடிமுடி இன்றே.' | | | - சி. செ. கோ. 29 | | |
ஈற்றடி குறைந்த குறள்தாழிசைக்குச் செய்யுள்: |
| `கம்பை மாநதி யின்க ரைச்சிறு கன்னி பார முலைத்தழும்பணி உம்பர்கோன் விடைஒன் றுலகேழும் உண்டதுவே.' | | | - 30 | | |
செந்துறைச் சிதைவுக் குறள் தாழிசைக்குச் செய்யுள்: |
| `முன்புல கீன்ற முகிழ்முலைக் கன்னியோ டின்புறும் யோகி எழுபுவிக் கரசே.' | | | - 31 | | |
சந்தழி குறள் தாழிசைக்குச் செய்யுள்: |
| `பின்றாழ் நறுங்கூந்தல் பிடிதழீஇ மால்யானைக் கன்றீனும் முக்கட் களிறு.' | | | - 32 | | |