|
கூன் ஆமாறு |
751. | அடிமுதல் பொருள்உற வருவது கூன் ; அஃது இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப. | | | | | |
மேல் கூறப்பட்ட செய்யுட்கு எல்லாம் இன்னும் ஒருவாற்றான் இலக்கணம் எய்துவிப்பான் புகுந்தவற்றுள் இஃது கூன் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : அடி முதற்கண் செய்யுள் பொருள்படத் தனியே வந்து நிற்பது கூனாம் ; அக்கூன் வஞ்சியுள் இறுதிக்கண்ணும் வந்து நிற்கும் என்று கூறுவர் புலவர் என்றவாறு. கூன் போறலின் கூன் ஆயிற்று. எனவே, தனி நிற்றல் பெற்றாம். இதனைத்தனிச்சொல் என்பாரும் உளர். வரலாறு. |
| `உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன் பரந்தானாப் பல்புகழ் பாடி, -- இரந்தார்மாட் டின்மை அகல்வது போல, இருள்நீங்க மின்னும் அளிதோ மழைழு | | | - யா. கா. 45 மே. | | |
என்னும் வெண்பாவினுள் `உதுக்காண்ழு எனவும், |
| `அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே, தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப் பாடமை சேக்கையுள் படர்கூர்ந் திசினே; | | | | | |