268

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.'
 
 

- குறள் 4

 
இதனுள் நிலமிசை என்றும் நீடுவாழ் என்றும் வார் என்றும் அலகிட மாறுபடாதாம்.
  `பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும்
ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால், -- நீடுநீர்
நல்வயல் ஊரன் நறுநஞ்சாந் தணியகலம்,
புல்லலின் ஊடல் இனிது.'
 
 

 - யா. கா. 45 மே.

 
இதனுள் டுகர நகரங்கள் பிரிந்து இசைத்தன ஆயினும் இரண்டு அடியும் நாலசைச்
சீராய்ச் செப்பலோசை சிதைதலின் டுகர நகரங்களைக் கூட்டி நிரை அசையாக அலகிடச்
சிதையாதாம். இவ்வாறே பிறவும் அலகிட்டுக் கொள்க.

(43)

விளக்கம்

     வகையுளி பொருளை நோக்காது ஓசையையே நோக்கிச் சீர் அமைப்பது.

     பாடுநர்க்கும் முதலியவற்றை நேர் நிரை நேர் ஆகிய கூவிளங்காயாகப் பிரிப்பவே
செய்யுள் அமையும். தேமாந்தண்பூ வாகப்பிரிப்பின் செய்யுள் கெடும். எனவே,
ாக்களுக்கு ஓசையே இன்றியமையாதது என்பது உணரப்படும்.

ஒத்த நூற்பாக்கள்

  `அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே.'
 
 

- தொ. பொ. 323

 
  `அருள்நோக்கு நீரார் அசைசீர் அடிக்கண்
பொருள்நோக்கா தோசையே நோக்கி, - மருணீக்கிக்
கூம்பவுங் கூம்பா தலரவும் கொண்டியற்றல்,
வாய்ந்த வகையுளியின் மாண்பு.'