செய்யுளியல் - நூற்பா எண் 45

275

 

[எளிய சொல்லால் செய்தியைப் படம் பிடித்ததுபோல விளக்கிக்காட்டியமை காண்க.]

     `போந்து போந்து சார்ந்து சார்ந்து எழுத்து 4
     தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து 5
     வண்டு சூழ, விண்டு வீங்கி 6
     நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம், 7
     ஊர்வாய் ஊதை வீச, ஊர்வாய் 8
     மதியேர் வண்டோடு ஒல்கி மாலை 9
     நன்மணம் கமழும் பன்னெல் ஊர ! 10
     அமையேர் மென்தோள், ஐஅரி நெடுங்கண், 11
     இணைஈர் ஓதி, ஏந்துஇள வனமுலை, 12
     இறும்புஅமல் மலரிடை எழுந்த மாவின் 13
     நறுந்தழை துயல்வரூஉம் செறிந்துஏந்து அல்குல், 14
     அணிநடை அசைஇய வரிஅமை சிலம்பின், 15
     மணிமருள் வணர்குழல், வளர்இளம் பிறைநுதல், 16
     ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு, 17
     நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர், 18
     இருந்தளமலரளவு சுரும்புலவு நறுந்தொடை 19
     கலனளவு கலனளவு நலனளவு நலனளவு 20
     பெருமணம் புணர்ந்தனை என்ப; அஃது  
     ஒருநீ மறைப்பது ஒழிகுவது அன்றே'

- யா. கா. 45 மே.

என இழைபும் வந்தவாறு காண்க. ஈண்டுக் காட்டாது ஒழிந்தனவும் (விருந்து, இயைபு)
வந்துழிக் காண்க.

     [சிந்தாமணியை விருந்திற்கும், மணிமேகலையை இயைபிற்கும் எடுத்துக்காட்டாகக்
கூறுப.]
     செய்யுளியல்உடையார் எழுத்து எண்ணி அடிவகுத்தவாறு என்னைஎனின்,
நாற்சீரடி தன்னையே நான்கு எழுத்து முதலாக ஆறு எழுத்தின்காறும் உயர்ந்த மூன்று
அடியும் குறள்அடி என்றும், ஏழ் எழுத்து முதலாக ஒன்பது எழுத்தின் காறும் உயர்ந்த