[எளிய சொல்லால் செய்தியைப் படம் பிடித்ததுபோல விளக்கிக்காட்டியமை காண்க.] |
| `சேரி மொழியான் செவ்விதின் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலன்என மொழிப புலனுணர்ந் தோரே.' | | | - தொ. பொ. 553 | | |
| `ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்.' | | | - 554 | | |
| `நாலெழுத்து ஆதி ஆக ஆறுஎழுத்து ஏறிய நிலத்தே குறள்அடி என்ப.' | | | - 348 | | |
| `ஏழ்எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே ஈரெழுத்து ஏற்றம் அவ்வழி யான.' | | | - 349 | | |
| `பத்துஎழுத்து என்ப நேர்அடிக்கு அளவே ஒத்த நால்எழுத்து ஏற்றலங் கடையே.` | | | - 350 | | |
| `மூவைந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப.' | | | - 351 | | |
| `மூவாறு எழுத்தே கழிநெடிற்கு அளவே ஈரெழுத்து மிகுதலும் இவண்பெறும் என்ப. | | | - 352 | | |
45 |
குறிப்பிசை ஆமாறு |
755. | எழுத்துஅல் இசைஎன, அசைசீர் ஆக, நிறைக்கப் படுதல் குறிப்பிசை என்ப. | | | | | |
இது குறிப்பிசை ஆமாறு கூறுகின்றது. இ-ள் : எழுத்து ஓசை அல்லாத முற்கு வீளை இலதை அனுகரணம் முதலியன செய்யுள்அகத்து வந்தால், அவற்றையும் அசையும் சீருமாக அலகிட்டுத்தளையும் அடியும் தொடையும் பிழையாமல் கொண்டு நிரப்புதலைக் குறிப்பிசை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |