|
வரலாறு : |
| `பொன்னின் அன்ன புன்னை நுண்தாது மணியின் அன்ன நெய்தலங் கானல்' | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |
இயைபுவண்ணம் இடையெழுத்து மிக்கு வருவது ; |
| `இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே' | | | - தொல். பொ. 530 | | |
என்ப ஆகலின், வரலாறு : |
| `வால்வெள் அருவி வரைமிசை இழியக் கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும்' | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |
அளபெடைவண்ணம் அளபெடை பயின்று வருவது; |
| `அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்' | | | - தொல். பொ. 531 | | |
என்பதுஆகலின். வரலாறு : |
| `தாஅட் டாஅ மரைமல ருழக்கி' | | | - யா கா. 20 மே. | | |
எனவரும். |
நெடுஞ்சீர்வண்ணம் நெட்டெழுத்துப் பயின்று வருவது; |
| `நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்' | | | - தொல். பொ. 532 | | |
என்ப ஆகலின், வரலாறு : |
| `நீரூர் பானா யாறே, காடே நீலூர் காயாம் பூவீ யாவே' | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |