286

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

எண்ணுவண்ணம் எண்ணுப் பயின்று வரும்;

  `எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்ழு  
 

- தொ. பொ. 540

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `நிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின்
அளப்பரி யையே;
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையே ...... ...... ...... ......
தவாலிய ரோஇவ் வுலகமொ டுடனே`
 
 

- பதிற். 14

 
என வரும்.

அகைப்புவண்ணம் அறுத்து அறுத்துப் பயிலும்;

(விட்டு விட்டு ஒலிப்பது.)

  `அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்ழு  
 

- தொல். பொ. 541

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `தொடுத்த வேம்பின் மிசைத்து தைந்த
போந்தை அடைய அசைந்த ஆரம்ழு
 
 

 - யா. வி. 95 மே.

 
என வரும்.

தூங்கல்வண்ணம் வஞ்சிஉரிச்சீர் பயின்றுவரும்;

  `தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்ழு  
 

- தொல். பொ. 542

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்ழு
 
 

- பட். 1, 2

 
என வரும்.