செய்யுளியல் - நூற்பா எண் 48

287

 

ஏந்தல்வண்ணம் சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்க
வரும்;

(ஒரு சொல்லே மிக்கு வருவது.)

  `ஏந்தல் வண்ணம்,
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்'
 
 

 -  தொல். பொ. 543

 
என்ப ஆகலின்.
     வரலாறு :
  `கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா
கூடலுள் கூடலே கூடலால் - கூடல்
அருவிய முல்லை அரும்பவிழ் மாலைப்
பிரியிற் பிரிவே பிரிவு'
 
 

- யா. வி. 95 மே.

 
என வரும்.

உருட்டுவண்ணம் அராகம் தொடுக்கும்;

  `உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்'  
 

 - தொல். பொ. 544

 
என்ப ஆகலின்.
     வரலாறு :
  `தாதுறு முறிசொறி தடமல ரிடையிடை
தழலென விரிவன பொழில்'
 
 

- யா. கா. 32 மே.

 
என வரும்.

முடுகுவண்ணம் நாற்சீர்அடியின் மிக்கு ஓர்அடி அராகத்தோடு ஒக்கும்;

  `முடுகு வண்ணம்,
அடியிறந் தோடி அதனோ ரற்றே'
 
 

 - தொல். பொ. 545

 
என்ப ஆகலின்.