| | `எண்ணி வருவன எண்எனப் படுமே.' | | | - மு. வீ. யா. ஒ. 26 | |
| | `உருட்டாம் அராகத் தொடுவரு வனவே.' | | | - மு. வீ. யா. ஒ. 27 | |
| | `அராகமாய் வருவது அன்றியும் அடிமுதல் ஈறுதோன் றாமல் தொடர்ந்தெ ழும்பிய அடியான் வருவன முடுகா கும்பே,' | | | - மு. வீ. யா. ஒ. 28 | |
| | `நேரிறு உரிச்சீர் மிகவந் தேந்திய ஓசையின் வருவன ஏந்திசை ஆகும்.' | | | - மு. வீ. யா. ஒ. 29 | |
| | `நிரையிறு உரிச்சீர் மிக்குத் தூங்கிய ஓசையின் வருவன தூங்கிசை ஆகும்' | | | - மு. வீ. யா. ஒ. 30 | |
| | `அறுத்தறுத் தியல்வன அகைப்பா கும்மே.' | | | - மு. வீ. யா. ஒ. 31 | |
| | `முடிந்தது போல முடியாது வருவன புறப்பாட் டென்மனார் புலமை யோரே.' | | | - மு. வீ. யா. ஒ. 32 | |
| | `முடியாதது போல முடிந்து வருவன அகப்பாட்டு என்மனார் அறிந்திசி னோரே,' | | | - மு. வீ. யா. ஒ. 33 | |
| | `அடிதொறும் அளபெடை எதுகை ஆக வருவன அளபாம் வகுக்குங் காலே.' | | | - மு. வீ. யா. ஒ. 34 | |
| | `நூற்பா உரைத்து வருவன பாவே.' | | | - மு. வீ. யா. ஒ. 35 | |
| | அடிதொறும் எதுகை ஆக ஆய்தம் கொடுவரல் நலிபாம் குறிக்குங் காலே.' | | | - மு. வீ. யா. ஒ. 36 | |
| | `ஓரடிக்கு ஓரடி மத்தியில் விட்டடி எதுகை ஒன்றின் இயல்வன தாவே.' | | | - மு. வீ. யா. ஒ. 37 | |
| | `அடிதொறும் ஒன்றாத் தொடையொடு வருவன ஒரூஉ எனப்பெயர் உரைக்கப் படுமே.' | | | - மு. வீ. யா. ஒ. 38 | |
| | `குற்றெழுத் தியைந்து வருவன குறுஞ்சீர் ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.' | | | - மு. வீ. யா. ஒ. 39 | |
| | `நெட்டெழுத் தியைந்து வருவன நெடுஞ்சீர் ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.' | | | - மு. வீ. யா. ஒ. 40 | |
| | `நெடிலும் குறிலும் நீங்காது வருவன சித்திரம் என்மனார் தெளிந்திசி னோரே.' | | | - மு. வீ. யா. ஒ. 41 | |