300

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `திண்டேர் வயவரைச் சேவைவென் றானன்ன தேங்கவுண்மா
வண்போ தமன்ற வழைநிழல் நீக்கி வார்சிலம்ப !
நண்போ நினையின்பொல் லாதது;நிற்க, என் நன்னுதலாள்
கண்போல் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே.'
 
     
     இதனுள் தலைமகனோடு உவமிக்கப்பட்ட யானையைத் துரந்தான் என ஊறுபடச்
சொன்னமையான் இதுவும் உவமக்காட்சியின் ஊனம் தோன்றிய ஆனந்த உவமம்.
  `வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம்
எள்ளி இரிந்தாற்போல் எவ்வழியும் -- வள்ளற்கு
மாலார் கடலன்ன மண்பரந்த வாட்டானை
மேலாரும் மேலார் விரைந்து'
 
     
     இதனுள் புலியினோடு உவமிக்கப்படுகின்ற தலைமகனாகிய வீரனோடு நாயை
உவமித்தமையால் இறப்ப இழிந்த ஆனந்த உவமை.
  `இந்திரனே போலும் இளஞ்சாத்தன், சாத்தற்கு
ம்தரமே போன்றிலங்கும் மல்லாகம் -- மந்தரத்துத்
தாழருவி போன்றுளது தார்மாலை அம்மாலை
ஏழுலகும் நாறும் இணர்'
 
     
     இதனுள் கீழ்மகனாகிய சாத்தனைக் குலமன்னரை உவமிக்கற் பாலனவற்றை
அவனுக்குப் பரிக்கலாகாமை உவமித்தமையின் இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை.
  `சென்றுபடு பருதியில் சிவந்த தோற்றத்தை'  
     
     இதனுள் படுஞாயிற்றுக்கு உவமையாகக் காட்டலின் இறந்துபாட்டுவமையானந்தம்.
  `தீயி னன்ன ஒண்செங் காந்தள்
தூவல் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியாது எடுத்த புன்புறச் சேவல்