செய்யுளியல் - நூற்பா எண் 50, 51

305

 
  `ஏனைய குற்றமும் இவற்றோ ரற்றே.'  
 

 - 44

 
  `ஆனந்தம் ஐவகை அறையுங் காலை
எழுத்தினிலை பிறழ்ந்தன எழுத்தா னந்தம்.'
 
 

- 45

 
  `சொல்லா னந்தம் சொல்நிலை பிறழ்ந்தன.'  
 

- 46

 
  `பொருள்நிலை பிறழ்வன பொருளா னந்தம்.'  
 

- 47

 
  `யாப்பின்நிலை பிறழ்வன யாப்பா னந்தம்.'  
 

- 48

 
  `அணிநிலை பிறழ்ந்து வருவன அணியா
னந்த மாமென நவிலப் படுமே.'
 
 

- 49

 

50

அடிவரையறை இல்லாச் செய்யுள்வகை

760. ஓரடி யானும் பலஅடி யானும்
ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள்;
அவைதாம்,
பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆகும் என்ப அறிந்திசி னோரே.
 
     
     இஃது அடி இன்றியும், ஓரடியானும் நடைபெறும் செய்யுட்களும் உள என்பதூஉம்
அவை இவை என்பதூஉம் கூறுகின்றது.

     இதற்குப் பொருள் உரைத்திலம், சூத்திரத்தானே பொருள் விளங்கலின்.
     பிசி - பொய்; அங்கதம் - வசை; இவற்றிற்கு உதாரணம் வந்துழிக் காண்க.

(51)

நான்காவது செய்யுளியல் முற்றும்.