செய்யுளியல் - நூற்பா எண் 10, 11

71

 
     இ-ள் : குறள் அடியும் சிந்தடியும் அளவடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் என
முற்கூறிய அடி ஐந்து வகைப்படும் என்றவாறு.
(10)

விளக்கம்

 

நிறுத்தமுறை - முதல் நூற்பா.  
 

 

 

ஒத்த நூற்பாக்கள்

 

`குறள்சிந்து அளவு நெடில்கழி நெடிலென்று
ஐவகை மரபின அடிவகை தாமே.'
 
 

- காக்கை

 

 

`தடுத்தன தட்டத் தளைபல தழுவியும்
அடுத்த சீரின் அடியெனப் படுமே.'
 
     

 

`குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே.'
 
 

- யா. வி. 23

 

 

`அடியென்ப தளைத்த அம்சீராம் நடை; அவை
குறளடி இருசீர் சிந்தடி முச்சீர்
அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி
கழிநெடி லடிஐந்தே கடந்தசீர் இவற்றுள்
எண்சீர் மிக்கடி எனின்சிறப்பு அன்றே.'
 
 

- தொ. வி. 211

10

ஐவகை அடிகளின் சீர்கள்

720.

குறள்ஒரு பந்தம், இருதளை சிந்தாம்,
முத்தளை அளவடி, நால்தளை நெடில்அடி,
ஐந்தளை முதலா எழுதளை காறும்
வந்தவும் பிறவும் கழிநெடில், என்ப.
 
     
     இது முற்கூறிய அடிகள் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : ஒரு தளையான் வந்த அடியினைக் குறள் அடி என்றும், இரு தளையான்
வந்த அடியினைச் சிந்தடி