செய்யுளியல் - நூற்பா எண் 11 | 75 | | | அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின் நீதி ஓதும் ஆதி ஆய செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே' | | | - யா. கா. 13 மே; சூளா. துற. 41 | | | எனவும் வரும் பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. | (11) | ஒத்த நூற்பாக்கள் | | `இருசீர் குறளடி, சிந்தடி முச்சீர், அளவடி நாற்சீர், அறுசீர் அதனின் இழிபு நெடிலடி, என்றிசி னோரே.' | | | - காக்கை | | | | `நாற்சீர் கொண்டது நேரடி யாமென்ப; தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப.' | | | - நற்றத்தம் | | | | நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே.' | | | - தொ. பொ. 344 | | | | `அடியுள் ளனவே தளையொடு தொடையே.' | | | - தொ. பொ. 345 | | | | `அடியிறந்து வருதல் இல்லென மொழிப.' | | | - தொ. பொ. 346 | | | | `குறளடி, சிந்தடி, இருசீர், முச்சீர்; அளவடி, நெடிலடி, நாற்சீர்; ஐஞ்சீர்; நிரல்நிரை வகையான் நிறுத்தனர் கொளலே.' | | | - யா. வி. 24 | | | | `கழிநெடில் அடியே கசடறக் கிளப்பின, அறுசீர் முதலா ஐயிரண்டு ஈறா வருவன பிறவும் வகுத்தனர் கொளலே.' | | | - யா. வி. 25 | | | | `குறளிரு சீரடி, சிந்துமுச் சீரடி, நாலொருசீர் அறைதரு காலை அளவொடு, நேரடி; ஐயொருசீர் நிறைதரு பாதம் நெடிலடி யாம் ; நெடு மென்பணைத்தோள் கறைகெழு வேற்கணல் லாய் ! மிக்க பாதம், கழிநெடிலே.' | | | - யா. கா. 12 | | | | `திரைத்த, இருது, குறள், சிந்து; அளவடி தேம்பழுத்து, விரிக்கு நெடிலடி, வேனெடுங் கண்ணி! வென்றான் வினையின், இரைக்குங், கணிகொண்ட, மூவடி வோ, டிடங், கொங்கு, மற்றும் கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர்! கழிநெடிலே.' | | | - யா. கா. 13 | | |
|
|
|