| `இருசீர் முச்சீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஐந்தின்மிக்கு வருசீரும் அந்தரங், கால், தீப், புனலொடு, மண், பெயரால் திரிசீ ரடியாம்; குறள்சிந்து அளவு நெடில்தகைமை தெரிசீர்க் கழிநெடில் என்று நிரல்நிறை செப்புவரே.' | | | - வீ. சோ. 109 | | |
| `இருசீ ரான்வரல் குறளடி எனலே.' | | | - மு.வீ.யா. 14 | | |
| `முச்சீ ரான்முடி வதுசிந் தடியே.' | | | - மு.வீ.யா. 15 | | |
| `நாற்சீ ரான்வரல் அளவடி யாகும்.' | | | - மு.வீ.யா. 16 | | |
| `ஐஞ்சீ ரான்வரு வதுநெடி லடியே.' | | | - மு.வீ.யா. 17 | | |
| `அறுசீர் முதலை யிருசீ ரடிகடை யாக வருவது, கழிநெடி லாகும்.' | | | - மு.வீ.யா. 18 | | | 11 | | |
அடிகளின் செய்யுட்குரிமை |
721. | வெண்பா அகவல் கலிநேர் அடியும் ஒண்பா வஞ்சி குறள்சிந்து அடியும் பாஇனம் எல்லாப் பாதமும் பெறுமே. | | | | | |
இது மேற்கூறிய அடிகள் செய்யுட்கு உரிய ஆமாறு கூறுகின்றது. இ-ள் : வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அளவடியும், ஒள்ளிய வஞ்சிப்பாக் குறள்அடியும் சிந்து அடியும், பாஇனம் எல்லா அடியும் பெற்று நடக்கும் என்றவாறு. நேரடி எனினும் அளவடி எனினும் ஒக்கும். |
அளவடியான் வந்த வெண்பாவிற்குச் செய்யுள்: |
| `வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை; அளந்தன போகம் அவர்அவர் ஆற்றான்; விளங்காய் திரட்டினார் இல்லை; களங்கனியைக் கார்எனச் செய்தாரும் இல்' | | | - யா. கா. 23 மே ; நாலடி.103 | | |
|
எனவும், |