செய்யுளியல் - நூற்பா எண் 12

77

 

அளவடியான் வந்த ஆசிரியப் பாவிற்குச் செய்யுள் :

 

`செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே
 
 

- யா. கா. 23 மே; குறுந். 1

 

அளவடியான் வந்த கலிப்பாவிற்குச் செய்யுள் :

`அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும்எனப்
பிரிவுஎண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேள்இனி.'
 

[இது தரவு]

 

`அடிதாங்கும் அளவன்றி அனல்அன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாய் காடுஎன்றார், அக்காட்டுள்,
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடிஊட்டிப் பின்உண்ணுங்ங் களிறுஎனவும் உரைத்தனரே.'
     

`இன்பத்தின் இகந்துஒரீஇ, இலைதீய்ந்த உலவையான்,
துன்புறூஉம் தகையவே காடுஎன்றார், அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே.'
     

 

`கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடுஎன்றார், அக்காட்டுள்
இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை, எனவும் உரைத்தனரே'
 
 

[இவை மூன்றும் தாழிசை]

 

 

என வாங்கு (தனிச்சொல்)  
     

 

`இனைநலம் உடைய கானகம் சென்றோர்,
புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின்