78

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

பல்லியும் பாங்குஒத்து இசைத்தன;
நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.ழு  (சுரிதகம்)
 
 

- யா. கா. 23 மே. கலி. 11

 
எனவும்,

குறள் அடியான் வந்த வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் :

 

`சுறமறிவன துறைஎல்லாம்
இறஈன்பன இல்எல்லாம்
மீன்திரிவன கிடங்குஎல்லாம்
தேன்தாழ்வன பொழில்எல்லாம்
என ஆங்கு,
தண்பணை தழீஇய இருக்கை
மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே.ழு
 
 

- யா. கா. 23 மே.

 
எனவும்,

சிந்தடியான் வந்த வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் :

 

`தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்
பன்னலத்த கலம்தொலையப் பரிவெய்தி,
என்நலத்தகை இதுஎன்னென எழில்காட்டிச்
சொல்நலத்தகைப் பொருள்கருத்தி னில்சிறந்தாங்கு
எனப் பெரிதும்
கலங்குஅஞர் எய்தி விடுப்பவும்,
சிலம்பிடைச் செலவும், சேண்நிவந் தற்றே.ழு
 
 

- யா. கா. 23 மே.

 
எனவும் வரும். எல்லா அடியானும் வந்த பா இனங்களுக்குச் செய்யுள் `திரைத்த
சாலிகைழு முதலியவாக முற்காட்டியவே கொள்க. (பக். 72) பிறவும் அன்ன.

     `ஒண்பாழு என்ற மிகையானே வெண்பாவின் ஈற்று அடியும் நேரிசை
ஆசிரியப்பாவின் ஈற்று அயல் அடியும், கலிவெண்பாவின் ஈற்று அடியும் சிந்தடியாயும்,
இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடைஅடி குறள் அடியாயும் சிந்து அடியாயும்
வரப்பெறும் எனக் கொள்க.
(12)