செய்யுளியல் - நூற்பா எண் 12

79

 

விளக்கம்

மேற்கூறிய என்றது சென்ற நூற்பாவினை.

ஒத்த நூற்பாக்கள்

`வஞ்சி அடியே இருசீர்த்து ஆகும்.'
 

 - தொ. பொ. 357

 

`முச்சீ ரானும் வரும்இடன் உடைத்தே.'
 

- தொ. பொ. 358

 

`ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கின்
தோற்றம் முச்சீர்த்து ஆகும் என்ப.'
 

 - தொ. பொ. 380

 

`இடையும் வரையார் தொடைஉணர் வோரே.'
 

- தொ. பொ. 381

 

 

`வெண்பா ஈற்றடி முச்சீர்த்து ஆகும்.'  
 

- தொ. பொ. 384

 

 

`இருசீர் அடியும் முச்சீர் அடியும்
வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே.'
 
 

 - மயேச்சுரம்

 

 

`ஆசிரியம் வெண்பாக் கலியோடு மும்மையும்
நாற்சீர் அடியான் நடைபெற் றனவே.'
 
 

- காக்கை.

 

 

`சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி
உண்டென் றறைப உணர்ந்திசி னோரே.'
 
 

- காக்கை.

 

 

`வஞ்சி-அல்லாப் பாவினுள் அடிவகை தெரியின்
எல்லாம் நாற்சீர், அல்லடி யியலா,
இறுதியும் அயலும் இடையும் முச்சீர்
பெறுதியும் வரையார் வெள்ளைமுதல் மூன்றும்.'
 
 

- மயேச்சுரம்

 

 

`இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும்;
நாற்சீர் அடியான் பாப்பிற மூன்றே.'
 
 

- அவிநயம்

 

 

`ஆசிரி யப்பா வெண்பாக் கலியென்று
மூவகைப் பாவும் நேரடிக்கு உரிய.'
 
 

- நத்தத்தம்

 

 

`வஞ்சி அல்லா மூவகைப் பாவும்
எஞ்சுதல் இலவே நாற்சீர் அடிவகை.'
 
 

- சிறுகாக்கை