செய்யுளியல் - நூற்பா எண் 14

85

 

அடிமோனைத் தொடைக்குச் செய்யுள் :

85

.

`மாவும் புள்ளும் வதிவயின் படர
மாநீர் விரிந்த பூவும் கூம்ப
மாலை தொடுத்த கோதையும் கமழ
மாலை வந்த வாடையின்
மாயோள் இன்உயிர் புறத்துஇறுத் தற்றே'
 

- யா. கா. 18 மே.

 
எனவும்,

அடி எதுகைத் தொடைக்குச் செய்யுள் :

.

`வடியேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார்
கடியார் கனங்குழாய்! காணார்கொல்? காட்டுள்
இடியின் முழக்கஞ்சி, ஈர்ங்கவுள் வேழம்
பிடியின் புறத்தசைத்த கை'
 

- யா. கா. 18 மே.

 
எனவும்,

பொருள் சொல் முரண் தொடைக்குச் செய்யுள்:

.

`இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னின் அன்ன நுண்தாது உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே'
 

- யா, கா, 18 மே.

 
எனவும்,

[சிறு - பெரு என்பன சொல்முரண்]

அடி அளபெடைத் தொடைக்குச் செய்யுள் :

.

`ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பினோடு
ஈஇர் இரைகொண்டு ஈர்அளைப் பள்ளியுள்,
தூஉம் திரைஅலைப்பத் துஞ்சாது, இறைவன்தோள்
மேஎ வலைப்பட்ட நம்போல், நறுநுதால்!
ஓஒ உழக்கும் துயர்'
 

 - யா. கா. 18 மே.

 
எனவும்,