| `தொடை என்பது ஈரடி தொடுப்பதாம்; அவை அடை முதல் மோனை, அந்தம் இயைபே, இடையே எதுகை, எதிர்மொழி முரண், அள பெடையே அளபாம், எனஐ வகையே.' | | | - தொ. வி. 212 | | |
| `எதுகை என்பது இயைவன மொழிக்கண் முதலெழுத்து அளவொத்து முதலொழித்து ஒன்றுதல்.' | | | - தொ. வி. 213 | | |
| `மூன்றாம்எழுத்து ஒன்றுதல் ஆசுஇனம் தலையாகு இடைகடை ஆறும் எதுகை வகையே.' | | | - தொ. வி. 214 | | |
| `மோனை முதலடி முதல்வரின் அடியே, இணைவது இணையே, இடைவிடல் பொழிப்பே, இறுவது ஒரூஉ, ஈறுஒன்று ஒழிவது கூழை, முதல்அயல் குன்றல் மேற் கதுவாய், ஈற்றயல்ஒன்று ஒன்றா தெனின்கீழ்க் கதுவாய், எல்லாம் ஒன்றுவது எனின்முற்று என்ப.' | | | - தொ. வி. 216 | | |
| `அடிஇணை பொழிப்புஒரூஉக் கூழை மேல்கீழ்க் கதுவாய் முற்றுஎன எட்டொடும் மோனை இயைபே எதுகை முரணே அளபே எனஐந்து உறழ எண்ணைந்து ஆகி அடிஅந் தாதி இரட்டைச் செந்தொடை எனஇம் மூன்றும் இயையத் தொடையும் விகற்பமும் எண்ணைந்து ஒருமூன்று என்ப.' | | | - தொ. வி. 218 | | |
| `அடிதொறும் முதலெழுத்து அணைந்து வரல்அடி மோனை என்மனார் முழுதுணர்ந் தோரே.' | | | - மு. வீ. யா. 24 | | |
| `இறுதி அசைஎழுத் தேனும் ஒன்றுவது அடிஇயைபு ஆம்என அறையப் படும்.' | | | - மு. வீ. யா. 25 | | |
| `இரண்டாம் எழுத்தொன் றுவதெது கையே.' | | | - மு. வீ. யா. 26 | | |
| `முரணத் தொடுப்பது முரண்தொடை ஆகும்.' | | | - மு. வீ. யா. 27 | | |
| `அளபெடுத்து ஒன்றுவது அளபெடைத் தொடையே.' | | | - மு. வீ. யா. 28 | | |
|