செய்யுளியல் - நூற்பா எண் 14, 15

93

 

 

`இணைஇரு சீர்மிசை எய்துவ தாகும்.'  
 

- மு. வீ. யா. 32

 

 

`பொழிப்பு இடையிட்டுப் போதுவ தாகும்.'  
 

- மு. வீ. யா. 33

 

 

`இருசீர் இடையிட்டு ஆதியும் அந்தமும்
ஒன்றின் ஒரூஉஎன்று உணர்ந்திசி னோரே.'
 
 

- மு. வீ. யா. 34

 

 

`இறுதிச் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பது
கூழை என்மனார் குறிஉணர்ந் தோரே.'
 
 

- மு. வீ. யா. 35

 

 

`முதல்அயல் சீர்ஒழித்து ஏனைய சீர்எலாம்
இயைத் தொடுப்பது மேற்கது வாயே.'
 
 

- மு. வீ. யா. 36

 

 

ஈற்றயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பது
கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்.'
 
 

- மு. வீ. யா. 37

 

 

`முழுவதும் இயைவது முற்றெனப் படுமே.'  
 

- மு. வீ. யா. 38

 

விகற்பமிலாத் தொடைகள்
 

724.

செந்தொடை இரட்டையோடு அந்தாதி எனவும்
வந்த வகையான் வழங்கவும் பெறுமே.
 
     
     இஃது இவ்வகையானும் தொடையாம் என்கின்றது.

     இ - ள் : செந்தொடை எனவும் இரட்டைத் தொடை எனவும் அந்தாதித்
தொடை எனவும் வந்த கூற்றால் நடக்கவும் பெறும், முற்கூறிய தொடை என்றவாறு,

(15)

விளக்கம்

இத்தொடைகளுக்கு இணை பொழிப்பு முதலிய விகற்பம் இல்லை என்பது கொள்க.

ஒத்த நூற்பாக்கள்

  `பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்
அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே
 
 

 - தொ. பொ. 402