| `அடியும் சீரும் அசையும் எழுத்தும், முடிவு முதலாச் செய்யுள் மொழியின் அஃது அந்தாதித் தொடையென்று அறிதல் வேண்டும்.' `அசையினும் சீரினும் அடிதொறும் இறுதியை முந்தா இசைப்பின் அஃது அந்தாதித் தொடையே.' `ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதி என்று ஓதினார் மாதோ உணர்ந்திசி னோரே.' | | | - யா. வி. 52 | | |
| `அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி; அடிமுழுதும் வந்த மொழியே வருவ திரட்டை; வரன் முறையான் முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால், செந்தொடை நாமம் பெறும்; நறுமென்குழல் தேமொழியே.' | | | - யா. கா. 17 | | |
| `ஓவில் அந்தாதி உலகுடனாம், ஒக்குமே இரட்டை, பாவருஞ் செந்தொடை பூத்த என்றாகும், பணிமொழியே.' | | | - யா. கா. 18 | | |
| `அந்தாதி அடிக்கடை ஆதி ஆதல்; இரட்டை முழுதுஓர் இறை அடுக் கியவடி; செந்தொடை தொடை ஒன்றும் சேரா அடியே.' | | | - தொ. வி. 217 | | |
| `அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி.' | | | - மு. வீ. 29 | | |
| `ஓரடி முழுதும் ஒருசொல் லேவரத் தொடுப்பது இரட்டைத் தொடைஎனப் படுமே.' | | | - மு. வீ. 30 | | |
| `ஓரடி முழுதும் ஒருசொல் லேவரத் தொடுப்பது இரட்டைத் தொடைஎனப் படுமே.' | | | - மு. வீ. 31 | | |
பாவகை |
726. | வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சிஎனப் பண்புஆய்ந்து உரைத்த பாநான்கு ஆகும். | | | | | |
இது நிறுத்த முறையானே முற்கூறிய பாவகை இத்துணைத்து என்கின்றது. |