இ - ள் : வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் எனத் தத்தம் தன்மையான் தெரிந்து சொல்லப்பட்ட பா நான்கு வகைப்படும் என்றவாறு. |
17 |
விளக்கம் |
தொடக்கத்தில் வெண்பாவும் ஆசிரியமுமே தோன்றின; பின் வெண்பா நடைத்தாகிய கலியும் ஆசிரியநடைத்தாகிய வஞ்சியும் தோன்றப் பாக்கள் நான்காயின என்பர் தொல்காப்பியனார். நிறுத்த முறை - முதல் நூற்பா. பா என்பது சேட்புலத்து ஒருவன் எழுத்தும் சொல்லும் புலனாகாத வகையில் பாடம் ஓதுங்கால் அவன் ஓதுகின்றதனை இன்னது என விகற்பித்து உணர்தற்கு ஏதுவாய பரந்துபட்டுச் செல்லுவதோர் ஓசைத் தொகுதி ஆகவே ஓசைபற்றிப் பாக்கள் வரையறுக்கப்பட்டன. |
ஒத்த நூற்பாக்கள் |
|
| `பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப.' | | | - தொல். பொ. 419 | | |
| `ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலிஎன மொழிப.' | | | - தொல். பொ. 420 | |
| `ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற்று என்ப பாவகை விரியே.' | | | - தொல். பொ. 417 | | |
| `செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின் பாவே பாவினம் எனஇரண்டு ஆகும்.' | | | யா. வி. 54 | | |