5. பிரி (பிரிநிலை) : இவனோ கொண்டான் - இங்கு பலரிலிருந்து ஒருவனைப் பிரித்துச் சுட்டுதலால் பிரிநிலை. 6. வினா: குற்றியோ மகனோ - என்பது குற்றியா மகனா என வினாப்பொருளைத் தருவதால் வினா. 7. ஒழிவு (ஒழியிசை) : படிக்கவோ வந்தாய் - இங்கே படிப்பதற்கு வரவில்லை; விளையாடுவதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத் தருவதால் ஒழியிசை. 8. சிறப்பு : ஓஒ பெரியன் - இங்கு ஒருவனது பெருமையை விளக்குவதால் உயர்வு சிறப்பு என்றும் ஓஒ கொடியன் - இங்கு ஒருவனது கொடுமையை விளக்குவதால் இழிவு சிறப்பு என்றும் பிரித்துப்பேசுவர். எற்று: போகல். எற்று என் உடம்பின் எழில் நலம் - இங்கு என் நலம் இழிந்தது என்று பொருள்படும். என்று என தரும் பொருள்கள்: 1. குறிப்பு: விண்ணென்று தெரிக்கிறது. விண்ணெனத் தெரிக்கிறது. 2. எண்: நிலன் என்று நீர் என்று தீயென்று வளியென்று வான் என்று ஐந்து பூதங்கள். நிலன் என நீர்எனத் தீயென வளியென வான் என ஐந்து பூதங்கள். 3. இசை: ஒல்லென்று ஒலித்தது. ஒல்லென ஒலித்தது. 4. பண்பு: வெள்ளென்று வெளுத்தது. வெள்ளென வெளுத்தது. 5. பெயர்: பாரி என்று ஒரு அரசன். பாரியென ஒரு அரசன். |