6. வினை: வருவான் என்று கூறினேன். வருவான் எனக் கூறினேன். ‘கொன்’ தரும் பொருள்கள்: 1. பயமிலி: கொன்னே கழிந்தன்று இளமை (நாலடியார் 55.1) - இளமை பயம் இல்லாமல் கழிந்தது. எனவே இது பயம் இன்மை பொருள். 2. காலம்: கொன்வரல் வாடை-காதலர் நீங்கியகாலம் அறிந்து வருதலை உடைய வாடை என்ற பொருள் தருவதால் காலப் பொருள். 3. பெருமை: ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந் 138) பெரிய ஊர் தூங்கினாலும்’ என்ற பொருள் தருவதால் பெருமைப் பொருள். 4. பயன் இல்லாமை: கொன்னே கழிந்தன்று இளமை - இளமை பயன் இல்லாமல் கழிந்தது. ‘தில்’ தரும் பொருள்கள்: 1. ஒழிவு: ‘வருகத்தில் அம்ம எஞ்சேரிசேர’ (அகம்.276.7) - வந்தால் ஒன்று செய்வேன் என்னும் ஒழிந்த சொற்பொருளைத் தருவதால் ஒழியிசை. 2. காலம்: ‘பெற்றாங்கு, அறிகதில் அம்ம இவ்வூரே (குறுந்.14) - பெற்றகாலத்தை அறிக எனக் காலத்தை உணர்த்துவதால் காலம். 3. விழைவு: ‘அரிவையைப் பெறுகதில் அம்ம யானே’ (குறுந். 14) அரிவையைப் பெருதல் விருப்பத்தை உணர்த்துவதால் விழைவு. மன்ற: - தேற்றம்: ‘மடவை மன்ற வாழிய முருக’ (நற். 34.11) - ‘திண்ணமாக நீ அறியாமையை உடையை - தெளிவுப்பொருள். |