உதாரணமாக இலக்கணக்கொத்து ஆசிரியர் கொடுத்துள்ளார். அரிசியைச் சோறாக ஆக்குகின்றான் என்ற புதைநிலை வாக்கியமே அரிசியால் சோறு ஆக்குகிறான் என்று வந்துள்ளது என்று கருதி இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை உருபில் வந்துள்ளது என்று அவர் கருதியிருக்க வேண்டும். அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் - இவளைக் கொள்ளும் இவ்வணி என்று பொருள்படுவதால் இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை உருபில் வந்துள்ளது. பழியின் அஞ்சும் (பழியை அஞ்சும்): 2ஆம் வேற்றுமைக்கு ஐந்தாம் வேற்றுமை உருபு வந்துள்ளது. நூலது குற்றம் கூறினான் - நூலைக்குற்றம் கூறினான் - 6 ஆம் வேற்றுமை ஏற்றது. கோட்டின்கண் குறைத்தான் - கோட்டைக் குறைத்தான் 7ஆம் வேற்றுமை ஏற்றது. நான்காம் வேற்றுமையும் ஏனைய எல்லா வேற்றுமை உருபைப் பயன்படுத்திக் கொள்ளும். 1 ஆம் வே : இரப்பவர் என் பெறினும் கொள்வர் - இரப்பவர்க்கு என்ன கொடுத்தாலும் கொள்வர் (இலக்கண விளக்கத்தில் உள்ள உதாரணம்.) 2 ஆம் வே : செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (குறள்167) - திருமகள் தவ்வைக்குக் காட்டிவிடும். 3 ஆம் வே : நாகராற்பலி - நாகர்க்குப்பலி 5 ஆம் வே : அவனின் இவன் நல்லன் - அவனுக்கு இவன் நல்லன் 6 ஆம் வே : நாகரது பலி - நாகர்க்குப் பலி |