34. | சொல்வகுக்கிற் றனிமொழியுந் தொடர்மொழியும் ஆகிச் சொற்பொருள்கொண்டு, இருதிணைஐம் பாலின், மூன்று இடத்தாய், ஒல்வழக்கிற் செய்யுளினிற் குறிப்பில்வெளிப் படையால் ஒரு பொருளால் பலபொருளாற் விரிப்பதுசொல் லியலாம் பலவகையாம் பொருளின்உயர் திணைமக்கட் சுட்டாம்; பகரும்அவ ரல்லது(உ)யிர் உள்ளவும்இல் லவுமாய்ச் செல்வது(அ)ஃ றிணையாம்;ஆண்,பெண்,பலர்மூன் று(உ)யர் பாற்; செறிஒன்று, பலஇரண்டும் இழிபால்அன் னதுவே. (1) | சொல்லின் பொது இலக்கணமும் அவற்றின் பாகுபாடும் கூறுகின்றது. உரை : சொல் என்பது ஒரு மொழி (தனி மொழி)யும் தொடர் மொழியும் என இருவகைத்தாய்ச் சொற்பொருள் கொண்டு இருதிணையாகிய ஐந்து பாலினையும் மூன்று இடத்தினையும் வழக்கின் கண்ணும் செய்யுட் கண்ணும் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் ஒரு பொருளாகவும் பல பொருளாகவும் |