எழுத்ததிகாரம் | 104 | முத்துவீரியம் |
ளகரத்திற்கு அல்வழி முடிபு
381. அல்வழி யெல்லா
முறழ்வா கும்மே.
(இ-ள்.) அல்வழிக்கண்
உறழ்ந்து முடியும்.
(வ-று.) முள் + கடிது = முட்கடிது.
(222)
ளகரத்தின் முன் தகரம்
382. தகரம் வரும்வழி
தனிநிலை யாகும்.
(இ-ள்.) தகரவொற்றுவரின்
ஆய்தமாகத் திரியுமென்க.
(வ-று.) முள் + தீது = முஃடீது
எனவரும்.
(வி-ரை.)
‘ஆய்த நிலையலும்
வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான’
(புள்ளி - 104)
என்பது தொல்காப்பியம்.
(223)
நெடில் முன் ளகரம்
383. இயல்பா நெடுமைமுன்
னென்மனார் புலவர்.
(இ-ள்.) நெடுமைக்கு
முன்னின்ற ளகரமெய் யியல்பாம்.
(வ-று.) கோள்கடிது எனவரும்.
(224)
தொழிற் பெயர்
384. தொழிற்பெய
ரெல்லாந் தொழிற் பெயரில.1
(இ-ள்.) தொழிற்பெய
ரெல்லாம் உகரச்சாரியை பெறும்.
(வ-று.) துள் + கடிது =
துள்ளுக்கடிது. (225)
இருள்
385. இன்னு மத்து மிருளொடு
சிவணும்.
(இ-ள்.) இருளென்னுங் காலப்பெயர்,
இன்சாரியையும், அத்துச்சாரியையும்
பெறுமெனவறிக.
1. தொல் - எழுத் - புள்ளி -
106.
|