எழுத்ததிகாரம்108முத்துவீரியம்

(இ-ள்.) வேற்றுமைக்கண், நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க்
குற்றியலுகரமும் டகர றகரங்கள் இரட்டிக்கும்.

(வ-று.) ஆட்டுக்கால், முயிற்றுக்கால். (233)

ஒற்று இடைமிகாக் குற்றுகரம்

393. ஒற்றிடை மிகாக்குற் றுகரமு முளவே
     வல்லின மிகலத் திறத்தினு ளிலவே.

(இ-ள்.) முற்கூறிய இரண்டனுள் மெய்யெழுத்திடையின் மிக்கு முடியாத மொழிகளும்
உளவாம் அக்கூற்றினில் வல்லின மிகாதியல்பாகும்.

(வ-று.) நாகுகால்; வரகுகதிர் எனவரும்.

(வி-ரை.)

‘ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே’ (குற்றிய - 7)

என்பது தொல்காப்பியம். (234)

இயல்பாகும் இடைத்தொடர் ஆய்தத்தொடர்கள்

394. இடைத்தொட ராய்தத் தொடரியல் பாகும்.

(இ-ள்.) இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரமும் ஆய்தத் தொடர்மொழிக்
குற்றியலுகரமும் மிகாதியல்பாம்.

(வ-று.) தெள்குகால்; எஃகுகால். (235)

வன்றொடர், மென்றொடர்க் குற்றுகரம்

395. வன்றொடர் மென்றொட ரிற்சில வலிக்கும்.

(இ-ள்.) வன்றொடர்மொழிக் குற்றியலுகரம் மென்றொடர் மொழிக் குற்றியலுகரங்களிற்
சிலமிகும்.

(வ-று.) கொக்குக்கால், பாம்புக்கால். (236)

மென்றொடர்க் குற்றுகரம்

396. அவற்றுள்,
     மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
     றம்மினம் வன்றொட ராகா மன்னே.