எழுத்ததிகாரம் | 108 | முத்துவீரியம் |
(இ-ள்.) வேற்றுமைக்கண்,
நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க்
குற்றியலுகரமும் டகர றகரங்கள்
இரட்டிக்கும்.
(வ-று.) ஆட்டுக்கால்,
முயிற்றுக்கால். (233)
ஒற்று இடைமிகாக்
குற்றுகரம்
393. ஒற்றிடை மிகாக்குற் றுகரமு முளவே
வல்லின மிகலத் திறத்தினு ளிலவே.
(இ-ள்.) முற்கூறிய
இரண்டனுள் மெய்யெழுத்திடையின் மிக்கு முடியாத
மொழிகளும்
உளவாம் அக்கூற்றினில் வல்லின
மிகாதியல்பாகும்.
(வ-று.) நாகுகால்;
வரகுகதிர் எனவரும்.
(வி-ரை.)
‘ஒற்றிடை யினமிகா
மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை
வல்லெழுத்து மிகலே’ (குற்றிய - 7)
என்பது தொல்காப்பியம்.
(234)
இயல்பாகும்
இடைத்தொடர் ஆய்தத்தொடர்கள்
394. இடைத்தொட ராய்தத்
தொடரியல் பாகும்.
(இ-ள்.)
இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரமும் ஆய்தத் தொடர்மொழிக்
குற்றியலுகரமும் மிகாதியல்பாம்.
(வ-று.) தெள்குகால்;
எஃகுகால். (235)
வன்றொடர்,
மென்றொடர்க் குற்றுகரம்
395. வன்றொடர் மென்றொட
ரிற்சில வலிக்கும்.
(இ-ள்.)
வன்றொடர்மொழிக் குற்றியலுகரம் மென்றொடர்
மொழிக் குற்றியலுகரங்களிற்
சிலமிகும்.
(வ-று.) கொக்குக்கால்,
பாம்புக்கால். (236)
மென்றொடர்க்
குற்றுகரம்
396. அவற்றுள்,
மென்றொடர் மொழியுட்
சிலவேற் றுமையிற்
றம்மினம் வன்றொட ராகா
மன்னே.
|