எழுத்ததிகாரம் | 109 | முத்துவீரியம் |
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
மென்றொடர் மொழிக் குற்றியலுகரங்களுட்
சிலவேற்றுமைக்கண் தமக்கினமாகிய வன்கணமாகி
மிக்குமுடியும்.
(வ-று.) குரங்கு + கால் =
குரக்குக்கால். (237)
மரப்பெயர்
397. மரப்பெயர்க் கிளவி
யம்மொடு சிவணும்.
(இ-ள்.) குற்றியலுகர
மரப்பெயர்மொழி அம்முச்சாரியை பெறும்.
(வ-று.) அரசு + காய் =
அரசங்காய். (238)
தேங்காய்
398. தெங்குநீண் டீற்றுயிர்
மெய்கெடுங் காய்வரின்.1
(இ-ள்.) மென்றொடர்மொழிக் குற்றுகரமாகிய
தெங்கென்னும் மரப்பெயருக்குமுன்
காயென்னுஞ் சொல்வரின் முதல் நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும்.
(வ-று.) தெங்கு + காய் =
தேங்காய் எனவரும். (239)
மரப்பெயர்
399. மெல்லொற்று வலியா
மரப்பெய ருளவே.2
(இ-ள்.) மெல்லொற்று
வல்லொற்றாகத் திரியாத மரப்பெயர்களுஞ்
சிலவுளவாம்.
(வ-று.) புன்கங்கோடு. (240)
நெடிற்றொடர்,
வன்றொடர்க் குற்றுகரம்
400. நெடிற்றொடர்
வன்றொட ரிற்சில அம்மிடை
வரற்கு முரியன வாகு மென்ப.
(இ-ள்.) நெடிற்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர் மொழிக் குற்றிய
லுகரங்களிற் சில
அம்முச்சாரியை நடுவில் வருதற்கு
முரியனவாம்.
1. நன் - எழுத் - உயிரீற் -
37.
2. தொல் - குற்றிய - 11.
|