எழுத்ததிகாரம் | 110 | முத்துவீரியம் |
(வ-று.) ஏறு + கோடு =
ஏறங்கோடு; புற்று + சோறு = புற்றஞ்சோறு. (241)
அக்குச் சாரியை பெறும்
குற்றுகரம்
401. அக்கொடு வரூஉ
மொழியுமா ருளவே.
(இ-ள்.) அக்குச்சாரியை
பெற்றுவரும் குற்றியலுகர மொழிகளுமுளவாம்.
(வ-று.) குன்றக்கூகை. (242)
எண்ணுப் பெயர்
402. எண்ணுப் பெயரெலா
மன்னொடு சிவணும்.
(இ-ள்.) குற்றியலுகர
எண்ணுப்பெயரெல்லாம் அன்சாரியைப் பெறும்.
(வ-று.) ஒன்றன்கூட்டம்
பிறவுமன்ன. (243)
வண்டும் பெண்டும்
403. 1வண்டும் பெண்டு
மின்னொடு சிவணும்.
(இ-ள்.) வண்டென்னும்
பெயரும் பெண்டென்னும் பெயரும் இன்சாரியை பெறும்.
(வ-று.) வண்டின்கால்,
பெண்டின்கை. (244)
பெண்டென் கிளவி
404. அவற்றுள்,
பெண்டன் னொடுவரூஉம்
பெற்றித் தாகும்.
(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள்,
பெண்டென்னுமொரு பெயர் அன்சாரியையும்
பெறுமென்க.
(வ-று.) பெண்டன்கால்
எனவரும்.
(வி-ரை.)
‘பெண்டென் கிளவிக்கு
அன்னும் வரையார்’ (குற்றிய - 16)
என்பது தொல்காப்பியம்.
(245)
1. தொல் - எழுத் - குற்றிய
- 15.
|