எழுத்ததிகாரம் | 111 | முத்துவீரியம் |
யாதும் ஆய்தப் பெயரும்
405. யாது மாய்தச் சுட்டு மன்பெறும்
ஆவயி னாய்த மழியுஞ்
சுட்டே.
(இ-ள்.) யாதென்னும்
வினாப்பெயரும் ஆய்தச் சுட்டுப் பெயரும்
அன்சாரியை பெறும்,
ஆயிடைச் சுட்டின் முன்னாகிய
ஆய்தங் கெடும்.
(வ-று.) யாது + கோடு =
யாதன்கோடு; அஃது + கோடு = அதன்கோடு, இஃது +
கோடு =
இதன்கோடு, உஃது + கோடு = உதன்கோடு. (246)
ஆய்தப்புள்ளி நிற்கும்
இடம்
406. ஆவிவரி னிலையும்
ஆய்தப் புள்ளி.
(இ-ள்.) உயிர்முதன்
மொழிவரின் ஆய்தம் நிலைபெறுமென்க.
(வ-று.) அஃதடை, இஃதடை,
உஃதடை.
(வி-ரை.)
‘முன்உயிர் வருமிடத்
தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி
யான’ (குற்றிய - 18)
என்பது தொல்காப்பியம்.
(247)
407. ஏனைய கணம்வரின்
இலவா கும்மே.
(இ-ள்.)
உயிர்க்கணமல்லாத வன்கண மென்கணம் இடைக் கணங்களுக்குமுன்
ஆய்தநிலை பெறாவாம்.
(வ-று.) அஃது + கடிது = அதுகடிது,
அதுமெலிது, அதுவலிது. (248)
408. அல்வழிக் கண்ணெலா
மிகாதியல் பாகும்.
(இ-ள்.) அல்வழிக்கண்
ஆறீற்றுக் குற்றுகரமும் மிகாது இயல்பாகும்.
(வ-று.) நாகுகடிது, எஃகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது,
குரங்குகடிது. (249)
409. வல்லெழுத்
தியையின் வன்றொடர் மிகுமே.
|