எழுத்ததிகாரம் | 114 | முத்துவீரியம் |
எண்ணின்முன் எண்
416. இரண்டொழித் தேனைய
விருநான் கெண்களும்
பத்தின் முன்வருங் காலை
யான
குற்றிய லுகரம் முற்றக் கெடுமே
ஒன்பா னொழியவின்
னொடுவரு மென்ப.
(இ-ள்.) இரண்டென்னு மெண்ணொழிய
மற்றைய வெட்டெண்களும் பத்தென்னு
மெண்முன் வருங்காற் குற்றியலுகரம் மெய்யொடுங்
கெடும், ஒன்பதென்னு மெண்ணொழிய
மற்றைய வெண்க
ளெல்லாம் இன்சாரியை பெறுமென வறிக.
(வ-று.) பதினொன்று,
பதின்மூன்று, பதினான்கு. (257)
பத்தின்முன் இரண்டு
417. இரண்டு முன்வரிற்
பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட வொற்று னவ்வாகு
மென்ப.1
(இ-ள்.)
பத்தென்னுமெண்முன் இரண்டென்னு மெண்வரிற்
பத்தினீற்றுயிர் மெய்கெடத்
தகரவொற்று
னகரவொற்றாகத் திரியும்.
(வ-று.) பன்னிரண்டு. (258)
பத்தின்முன் ஆயிரம்
418. ஆயிரம் வரினு
மின்னொடு நிலையும்.
(இ-ள்.) ஆயிரமென்னும்
எண்வரினு மின்சாரியை பெறுமென்க.
(வ-று.) பதினாயிரம்
எனவரும். (259)
பத்தின்முன் நிறையும்
அளவும்
419. நிறையு மளவு நேருங் காலைக்
குறையா தாகு மின்னென்
சாரியை.
(இ-ள்.) நிறைப்பெயரு
மளவுப் பெயரும் வந்து புணரின் இன்சாரியை பெறும்.
(வ-று.) பதின்கழஞ்சு,
பதின்கலம். (260)
1. நன் - எழுத். உயிரீற் -
48.
|