எழுத்ததிகாரம் | 115 | முத்துவீரியம் |
ஒன்றுமுதல் ஒன்பதன்முன்
பத்து
420. ஒன்று முதலொன்
பான்முற் பத்திடை
மெய்கெட வாய்த மாறல்லா
வழியே.
(இ-ள்.) ஒன்றுமுதல்
ஒன்பதீறாகக் கிடந்த எண்ணுப் பெயர்களின்
முன்னின்ற
பத்தினிடை யொற்றுக்கெட ஆய்தம்
பெறும் ஆறென்னு மெண்ணொழிய.
(வ-று.) ஒருபஃது, இருபஃது,
முப்பஃது பிறவுமன்ன. (261)
எண்ணுப் பெயர்களுள்
நீண்டும் குறுகியும் வருவன
421. ஒன்று முதலெட் டீறா மெண்ணுள்
முதலீ ரெண்முத னீளுமூன் றாறேழ்
குறுகு மாறே ழல்ல வற்றின்
ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
ஏகு மேற்புழி யென்மனார்
புலவர்.1
(இ-ள்.) ஒன்றுமுத லெட்டீறாகிய வெண்களுள்
ஒன்றும் இரண்டும் முதனீளும், ஆறும்
ஏழும் முதல் குறுகும், ஆறும் ஏழுமல்லாத எண்களின் இறுதி
யுயிர்மெய்யும் ஏழனுயிருங்
கெடுமெனவறிக.
(வ-று.) ஒன் = ஓன்; இரண் =
ஈரண்; மூன் = முன், ஆறு = அறு, ஏழ் = எழ். (262)
ஒன்றும் இரண்டும்
422. ஒன்ற னொற்றே ரகார
மாகும்
இரண்ட னொற்றுயி ரேகவுவ்
வருமே.
(இ-ள்.) ஒன்றென்னும் எண்ணின் மெய்
ரகரமெய்யாகும், இரண்டென்னும் எண்ணின்
மெய்யும் உயிருங்கெட உகரச்சாரியை
வரும்.
(வ-று.) ஒருபது, இருபது. (263)
மூன்று
423. மூன்றன் மெய்யே பகார
மாகும்.
1. நன் - எழுத் - உயிரீற் -
38.
|