எழுத்ததிகாரம் | 116 | முத்துவீரியம் |
(இ-ள்.) மூன்றென்னும்
எண்ணின்கணின்ற னகரமெய் பகரமெய்யாகத்
திரியும்.
(வ-று.) முப்பது. (264)
நான்கு
424. நான்கன் மெய்யே
றகார மாகும்.
(இ-ள்.) நான்கென்னும்
எண்ணின்கணின்ற னகரமெய் றகர மெய்யாகத்
திரியும்.
(வ-று.) நாற்பது. (265)
ஐந்து
425. ஐந்த னொற்றே மகார
மாகும்.1
(இ-ள்.) ஐந்தென்னும்
எண்ணின்கணின்ற நகரமெய் மகர மெய்யாகத்
திரியும்.
(வ-று.) ஐம்பது. (266)
எட்டு
426. எட்ட னுடம்புணவ் வாகு
மென்ப.2
(இ-ள்.) எட்டென்னும்
எண்ணின்கணின்ற, டகரமெய் ணகர மெய்யாகத்
திரியும்.
(வ-று.) எண்பது. (267)
வருமொழி வரையறை
427. பத்து முன்வருங் காலை
யான.
(இ-ள்.) பத்தென்னும்
எண்ணுப்பெயர் வருங்காலென்க.
(வி-ரை.) 422 முதல் 426
வரையுள்ள நூற்பாக்களுக்கு வருமொழி கூறுவது
இந்நூற்பாவாகும். (268)
1. தொல் - எழுத்து -
குற்றிய - 37.
2. நன்: எழுத் - உயிரீற் -
43.
|