எழுத்ததிகாரம்117முத்துவீரியம்

எண்ணுப்பெயர்முன் அளவும் நிறையும்

428. அளவு நிறையும் வரினியல் பாகும்.

(இ-ள்.) அளவுப்பெயரு நிறைப்பெயரும் வரின் இயல்பாம்.

(வ-று.) ஒருகலம், ஒருகழஞ்சு, இருகலம். (269)

மூன்றன்புள்ளி

429. மூன்றன் புள்ளி வந்தது மாகும்.

(இ-ள்.) மூன்றென்னும் எண்ணின்கண் நின்ற னகரமெய் வந்த மெய்யாகத் திரியும்.

(வ-று.) முக்கலம், முக்கழஞ்சு எனவரும். (270)

ஐந்தனொற்று

430. ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்.1

(இ-ள்.) ஐந்தென்னும் எண்ணின்கண் நின்ற நகரமெய் வருமொழி வல்லெழுத்துக்
கேற்ற மெல்லெழுத்தாகத் திரியும்.

(வ-று.) ஐங்கலம், ஐங்கழஞ்சு. (271)

இதுவுமது

431. வல்லெழுத்து வரூஉங் காலை யான.

(இ-ள்.) க, ச, த பக்கள் வருங்கால் எனவறிக. (272)

ஐந்தும் மூன்றும்

432. ஐந்தும் மூன்றும் நமவரு காலை
     ஒற்றிய னிலைகெட வந்தது மாகும்.

(இ-ள்.) ஐந்தென்னும் எண்ணும் மூன்றென்னும் எண்ணும், நகர மகரங்கள் வருங்கால்
வந்த மெய்யாகத் திரியும்.

(வ-று.) ஐந்நாழி=ஐம்மண்டை; முந்நாழி=மும்மண்டை. (273)

1. தொல் - எழுத் - குற்றிய - 42.