| எழுத்ததிகாரம் | 118 | முத்துவீரியம் |  
  
மூன்றனொற்று 
433. மூன்ற னொற்றே வகரம் வரும்வழி 
     தோன்றிய வகரத் துருவா
கும்மே.1 
(இ-ள்.) மூன்றென்னும்
எண்ணின்கணின்ற னகரமெய் வகரம் வருங்கால் வந்த 
வகரவடிவா மென்க. 
(வ-று.) மூவட்டில். (274) 
நான்கன்மெய் 
434. நான்கன் மெய்யே
லகார மாகும். 
(இ-ள்.) நான்கென்னும்
எண்ணின்கண் நின்ற னகர மெய் லகரமெய்யாகத்
திரியும். 
(வ-று.) நால்வட்டில். (275) 
ஐந்தனொற்று 
435. ஐந்த னொற்றே
யடியொடு கெடுமே. 
(இ-ள்.) ஐந்தென்னும்
எண்ணின்கண் நின்ற நகரமெய் முன்வடிவு கெடும். 
(வ-று.) ஐவட்டில். (276) 
ஒன்று, இரண்டின்முன்
உயிர் 
 436. ஒன்று மிரண்டு
முயிர்வரு காலை 
     உகரங் கெடுத லாவயி னான. 
(இ-ள்.) ஒரு இருவென
முடிந்துநின்ற இரண்டெண்களின் முன் உயிர்வரி
னுகரங்கெடும். 
(வ-று.) ஓரகல், ஈரகல்
எனவரும். (277) 
மூன்று நான்கு ஐந்து 
437. மூன்று நான்கு மைந்துந் தோன்றிய 
     வகரத் துருவாய் வழங்கு
மென்ப. 
(இ-ள்.) மூன்றென்னும் எண்ணும், நான்கென்னும்
எண்ணும், ஐந்தென்னும் எண்ணும் 
முற்றோன்றி நின்ற வகரம் 
1. தொல் - எழுத் - குற்றிய
45. 
			
				
				 |