எழுத்ததிகாரம் | 119 | முத்துவீரியம் |
வருமொழிக்குக் கூறிய வியல்பாக
மூன்றுக்கு வகரமும், நான்குக்கு லகரமும் ஐந்து
கெடுதலுமாம்.
(வ-று.) முவ்வகல், நாலகல்,
ஐயகல் எனவரும். (278)
மூன்றன்முன் உழக்கு
438. உழக்கு வரின்முத
னீளுமூன் றெண்ணே.
(இ-ள்.) உழக்கென்னுஞ்
சொல்வரின் மூன்றென்னுமெண் முதனீளும்.
(வ-று.) மூவுழக்கு எனவரும்.
(279)
ஆறு
439. ஆறுமவ் வியல்பிற்
றாகும்.
(இ-ள்.) ஆறென்னும் எண்ணும்
முதனீளும்.
(வ-று.) ஆறகல். (280)
ஒன்பது
440. ஒன்பா னின்னொடும்
ஒழுகு மென்ப.
(இ-ள்.) ஒன்பதென்னும்
எண்ணுப் பெயர் இன் சாரியை பெறுமென்க.
(வ-று.) ஒன்பதின்கலம். (281)
எண்ணுப் பெயர்முன் நூறு
441. நூறென் கிளவி
வரினியல் பாகும்.
(இ-ள்.) நூறென்னும்
எண்ணுப்பெயர் வரின் இயல்பாகும்.
(வ-று.) ஒருநூறு, இருநூறு. (282)
மூன்றன் மெய்
442. மூன்றன் மெய்யே நகார
மாகும்.
(இ-ள்.) மூன்றென்னும்
எண்ணின்கண் நின்ற னகரமெய் நகரவொற்றாகத்
திரியும்.
|