சொல்லதிகாரம்137முத்துவீரியம்

(வ-று.) கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள். (38)

தாம்

496. தாமெனு மொருபெயர் பன்மைக் குரிய.

(இ-ள்.) தாமென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மைப்பாற் குரியவாம்.

(வ-று.) தாம் வந்தார், தாம் வந்தன. (39)

தான்

497. தானெனு மொருபெய ரொருமைக் குரிய.

(இ-ள்.) தானென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாற் குரியவாம்.

(வ-று.) தான் வந்தான், தான் வந்தது. (40)

எல்லாம்

498. எல்லா மென்ப திருதிணைப் பன்மைப்
     பெயரொடு நிலையும் பெற்றித் தாகும்.

(இ-ள்.) எல்லாமென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மையைக் குறித்துவரும்.

(வ-று.) எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தன. (41)

நீயிர், நீ

499. நீயிர்நீ பாறெளி விலவா மென்ப.

(இ-ள்.) நீயிர் - நீயென்னு மிரண்டு பெயரும், திணைப்பகுதி தெரிய நில்லாவாம்;
இருதிணையும் உடன்றோன்றும் பொருளவாம்.

(வ-று.) நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றமை காண்க.
(42)

நீ

500. அவற்றுள்,
     நீயென் கிளவி யொருமைக் குரிய.