சொல்லதிகாரம் | 139 | முத்துவீரியம் |
(இ-ள்.) பெண்மக ளென்னும்பெயர்
வினைகொள்ளுங்கால் பெண்மைக்குரிய
வினைகொள்ளும்.
(வ-று.) பெண்மகள் வந்தாள்
எனவரும். (47)
செய்யுட்கண் ஆகாரம்
ஓகாரமாதல்
505. யாப்பினுள் ஆ, ஓ வாகலு
முளவே.
(இ-ள்.) செய்யுளுள் ஆகாரம்
ஓகாரமாய்த் திரிதலுமுளவா மென்க.
(வ-று.) வில்லான்,
வில்லோன், தொடியான், தொடியோன், நல்லார்,
நல்லோர்.
(வி-ரை.)
‘பெயர்வினை யிடத்து
னளரய ஈற்றயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள்
உரித்தே’ (பொது - 2)
என்ற நன்னூல் நூற்பாவைக்
கொண்டு இதன் கருத்தை நன்கறியலாம்.
எடுத்துக்காட்டில்
னளர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம்
ஆதற்கு மட்டுமே உள்ளன.
‘வந்தோய் மன்ற தண்கடற்
சேர்ப்ப’ (அகம் - 80) என்பதால் யகர ஈற்றயலும் ஆ
ஓவாகும் என அறியலாம். (48)
பெயர்ச்சொல் வேற்றுமை
ஏற்றல்
506. எல்லாப் பெயரும்
வேற்றுமை யேற்கும்.
(இ-ள்.)
பெயர்ச்சொல்லெல்லாம் வேற்றுமை பெறும். (49)
வேற்றுமை எட்டு
507. வேற்றுமை தானே
விளியோ டெட்டே.
(இ-ள்) விளிவேற்றுமையோடு
வேற்றுமை யெட்டாகும். (50)
வேற்றுமை யுருபுகள்
508. பெயரை யொடுகுவ்
வின்னது கண்விளி.
(இ-ள்.) எட்டெனக்கூறிய
வேற்றுமையாவன பெயரும், ஐயும், ஒடுவும், குவ்வும்,
இன்னும், அதுவும், கண்ணும் விளியுமா மென்க. (51)
|