எழுத்ததிகாரம்14முத்துவீரியம்

(காரிகை - மேற்கோள்) எனத் தன்மாத்திரையின் மிகுந்தொலிக்கு மென்க. (31)

அதன் வகை

32. அதுதான்
    இயற்கை செயற்கை யின்னிசை சொல்லிசை
    நெடில்குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு
    எண்வ கைப்படும் என்மனார் புலவர்.

(இ-ள்.) அவ்வளபெடை இயற்கையளபெடை, செயற்கை யளபெடை, இன்னிசை
யளபெடை, சொல்லிசை யளபெடை, நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை,
எழுத்துப் பேறளபெடை என எட்டுவகைப்படும்.

(வ-று.) அழைத்தல் விலைகூறல், புலம்பல் எழுத்துச் செயற்கையின்றிப் பிறந்தது
இயற்கை யளபெடை. செய்யுளில் சீர் தளை கெட்ட விடத்துப் புலவன் கொள்ளுதல்
செயற்கை யளபெடை கெடுப்பதூஉம். (குறள் - வான் சிறப்பு) குற்றுகரமளபெடுத்த இன்னிசை
யளபெடை. அளைஇ (குறள் - இனியவை கூறல்) ஐகாரக்குறுக்க மளபெடுத்த சொல்லிசை
யளபெடை. ஆ அ நெடிலளபெடை. மணீ இ. குற்றெழுத்து நெட்டெழுத்தாகி யளபெடுத்த
குறிலளபெடை. சிந்ந்து ஒற்றளபெடை. சந்திரனை யராஅப் பற்றிற்று விகாரத்தெழுந்த
எழுத்துப் பேறளபெடை என வந்தமை காண்க. (32)

அளபெடையின் மறு பெயர்கள்

33. அளபும் புலுதமு மளபெடைப் பெயரே.

(இ-ள்.) அளபெனினும், புலுதமெனினும், அளபெடையென்னும் ஒரு பொருட்கிளவி.
(33)

குற்றியலிகரம்

34. யகரம் வரும்வழி யிகரங் குறுகும்.

(இ-ள்.) யகரமுதன் மொழிவரக் குற்றியலுகரம் திரிந்த இகரம் தன் மாத்திரையில்
குறுகும்.

(வ-று.) ஆகி யாது, எஃகி யாது, வரகி யாது, கொக்கி யாது, சங்கி யாது, தெள்கி யாது,
சுண்ணாம் பியாது. (34)

இதுவுமது

35. அசைச்சொன் மியாவி னிகரமு மற்றே.