சொல்லதிகாரம்144முத்துவீரியம்

(இ-ள்.) ஏழாம் வேற்றுமை யுருபாவது கண் முதலியனவாம். (66)

அதன் பொருள் நிலை

524. அதன்பொருள் பொருண்முத லாறிரு கிழமையின்
     இடனாய் நிற்ப தென்மனார் புலவர்.

(இ-ள்.) பொருளும், இடமும், காலமும், சினையும், குணமும், தொழிலும் ஆறும்
தற்கிழமைப் பொருள் பிறிதின் கிழமைப் பொருள்களுக்கும் இடமாய் நிற்கின்ற வுருபேற்ற
பெயர்ப்பொருள் வேறுபட்ட அவ்விடப் பொருணிலையாம்.

(வ-று.) மணியின்க ணிருக்கின்றதொனி - தற்கிழமை. பனையின் கண் வாழ்கின்ற
தன்றில் - பிறிதின் கிழமை; பொருள் ஊரின்கணிருக்கு மில்லம் - தற்கிழமை.
ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து - பிறிதின் கிழமை; இடம். நாளின்கணாழிகையுள்ளது
- தற்கிழமை. வேனிற்கட் பாதிரிபூக்கும் - பிறிதின்கிழமை; காலம் கையின்கணுள்ளது
விரல் - தற்கிழமை; கையின்கண் விளங்குகின்றது. கடகம் - பிறிதின்கிழமை. சினை.
கறுப்பின் மிக்கதழகு - தற்கிழமை. இளமையின்கண் வாய்த்தது செல்வம் - பிறிதின்கிழமை;
பண்பு. ஆடற்கணுள்ளது சதி - தற்கிழமை. ஆடற்கட் பாடப்பட்டது பாட்டு; பிறிதின்
கிழமை. தொழில்.

(வி-ரை.) மேலைய நூற்பாவும் இந்நூற்பாவும்,

‘ஏழ னுருபுகண் ணாதி யாகும்
பொருண்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப’ (பெயர் - 44)

என்னும் நன்னூற் கருத்தைத் தழுவியனவாகும். (67)

இதுவுமது

525. கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல்
     பின்சார யல்புடை தேவகை யெனாஅ
     முன்னூ லிடைகடை வலமிட மெனாஅ
     அன்ன பிறவு மதன்பால வென்மனார்.

(இ-ள்.) கண் முதல் இடம் ஈறாக் கூறிய பத்தொன்பதும் அவை போல்வன பிறவும்
ஏழாவதன்றிறத்தனவாம்.

(வ-று) கண்ணகல், ஊர்க்கால், ஊர்ப்புறம், எயிலகம், சில்லுள், அரசனுழை,
ஆலின்கீழ், மரத்தின்மேல், ஏர்ப்பின், காட்டுச்சார், உறையூர்க்கயல், எயிற்புடை, வடபால்,
புவிமுன், நூலினிடை, நூலின்கடை,