சொல்லதிகாரம் | 150 | முத்துவீரியம் |
(இ-ள்.) எவ்வுருபிற்
கூறிற்றானாலும் பொருள்போம் வழியே வேற்றுமை
பொருந்துமென்க.
(வ-று.) மணற்கீன்ற
நாணற்கிழங்கின்முளை, மணற்கணீன்ற
நாணற்கிழங்கின்முளை. (84)
உருபுகள் இணைந்தும்
தொக்கும் வருதல்
542. ஓருரு பேனைய வுருபொடு
சிவணலும்
தொக்குநின் றொழுகலும்
வழுவா காவே.
(இ-ள்.) ஒரு வேற்றுமையுருபு
வேறொரு வேற்றுமையுருபோடு பொருந்தலும்
தொக்குநின்று நடத்தலும் குற்றமில்லையாம்.
(வ-று.) சாத்தனதனை,
சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனதனின்,
சாத்தனதுவது,
சாத்தனதன்கண், நிலங்கடந்தான்,
தாய் மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன்கை,
குன்றக்கூகை.
(வி-ரை.) ஓருருபு
பிறிதோருருபை யேற்றல் எனப் பொதுவகையாற்
கூறினாரேனும்,
ஈண்டுப் பிறவுருபை ஏற்றற்கு ஆறனுருபே
ஏற்றதாகக் கொண்டனர் உரையாசிரியர்.
இளம்பூரணரும் சேனாவரையரும் ‘பிறிது பிறிதேற்றல்’
(தொல் - சொல் - 104) என்னும்
நூற்பாவில் இங்ஙனமே
உரை கண்டனர். எனினும் தெய்வச் சிலையாரும்,
சிவஞான
முனிவரும் இதனை வன்மையாக மறுப்பர்.
அத்திறமெல்லாம் அவரவர் உரை நோக்கி யறிக.
‘பிறிது பிறிதேற்றலும்
உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய
வழிமருங் கென்ப’
(தொல் - சொல் - 104) என்ற
தொல்காப்பியக் கருத்தை இந்நூற்பா தழுவியதாகும்.
(85)
உருபுகள்
எதிர்மறுத்துரைப்பினும் பொருள் திரியாது வருதல்
543. எதிர்மறுத்
துரைப்பினும் பொருணிலை திரியா.
(இ-ள்.) விதிமுகத்தாற்
கூறாது எதிர்மறுத்துக் கூறினும் தத்தம்
இலக்கணத்தான் வரும்
பொருணிலைதிரியா வேற்றுமை
யுருபுகள்.
(வ-று.) மரத்தைக் குறையான், வேலானெறியான்,
குறையான், எறியான், என்றவழி
வினை நிகழாமையின், மரமும், வேலும்,
செயப்படு பொருளும், கருவியு
மெனப்படாவாயினும் எதிர்மறை வினையும் விதி வினையோ
டொக்குமென்பது
நூன்முடிபாகலால் ஆண்டுவந்த வுருபும். செயப்படுபொருண்
முதலாயினவற்று
மேல்வந்தனவெனப் படுமென
வழுவமைதியாம்.
|