சொல்லதிகாரம்151முத்துவீரியம்

(வி-ரை.)

‘எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே’

(வேற்றுமை மயங் - 24) என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் தழுவியதாகும். (86)

ஐ, கு, ஆன் என்பன அகரம் பெறுதல்

544. ஐ, கு, ஆ னென வரூஉ மிறுதி
     அ வொடு சிவணும் யாப்பின் மருங்கே.

(இ-ள்.) ஐ, கு, ஆன் எனவரு மூன்றுருபுந் தொடரிறுதிக்கணின்றவழி அகரத்தோடு
பொருந்தி நிற்றலு முடையன வாஞ் செய்யுட்கணென்க.

(வ-று) காவலோனைக் களிறஞ்சும்மே, காவலோனக் களிறஞ்சும்மே,
கடிநிலையின்றேயாசிரியற்கு, கடிநிலையின்றே யாசிரியற்க (தொல் - புள்ளி - 94)
புரைதீர்கேள்விப் புலவரான், புரைதீர்கேள்விப் புலவரான எனவரும். (87)

அஃறிணைக்கண் ஆன் அகரமாகத் திரிதல்

545. அஃறிணை மருங்கி னான்அ வாகும்.

(இ-ள்.) அஃறிணைக்கண் ஆன்உருபொன்றுமே அகரத்தோடு பொருந்துமென்க.

(வ-று.) புள்ளினான், புள்ளினான எனவரும்.

(வி-ரை.)

‘ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும்
ஆகா அஃறிணைக் கானல் லாதன’

(நன் - பெயரி - 61) என்பர் நன்னூலாரும். (88)

நான்க னுருபு பிறவுருபுகளோடு கூடிவருதல்

546. குச்சில வுருபொடு கூடிநின் றொழுகும்.

(இ-ள்.) நான்காம் வேற்றுமை யுருபு சிலவுருபுகளோடு கூடி நடக்கும். (89)