| சொல்லதிகாரம் | 155 | முத்துவீரியம் |  
  
(இ-ள்) மேற்கூறப்படுவன
வாகிய பெயர்தாம் இ, உ, ஐ, ஓ, களையிறுதியாகிய நான்கு 
பெயரும் உயர்திணைக்கண் விளியேற்குமென வறிக. (101) 
இ, ஐ விளியேற்குமாறு 
559. அவற்றுள், 
     இ, ஈ யாகும் ஐ, ஆ வாகும். 
(இ-ள்.) முற்கூறிய
நான்கீற்றினுள் இ, ஈ யாயும் ஐ, ஆ வாயும்
விளிக்குமென்க. 
(வ-று.) நம்பி, நம்பீ;
நங்கை, நங்காய். (102) 
உ, ஓ விளியேற்குமாறு 
560. உகரம் ஓகாரம் ஏயொடு
சிவணும். 
(இ-ள்.) உ, ஓ, ஏ
பெற்றுவிளிக்கும். 
(வ-று.) வேந்து, வேந்தே;
கோ, கோவே. (103) 
முற்கூறிய உகரம்
குற்றியலுகரம் எனல் 
561. உகரந் தானே குற்றிய
லுகரம்.1 
(இ-ள்.) முற்கூறிய வுகரமானது
குற்றியலுகரமாம். (104) 
உயர்திணைக்கண் பிற
ஈறுகள் விளியேலாமை 
562. உயர்திணை மருங்கினே
னையவுயிர் விளியா. 
(இ-ள்.) உயர்திணைக்கண்
முற்கூறிய நான்கு ஈறுமல்லாத வுயிர் விளியேலாவா 
மெனவறிக. (105) 
அளபெடை மிகூஉம் இகரஇறு
பெயர் 
563. அளபெடை மிகூ மிகர விறுபெயர் 
      இயற்கைய வாகு மென்மனார்
புலவர். 
(இ-ள்.) அளபெடை
தன்மாத்திரையின் மிக்கும் இகரவிறுதிப் பெய ரியல்பாய் 
விளிக்குமென்க. 
1. தொல் - சொல் - 123. 
			
				
				 |