சொல்லதிகாரம்155முத்துவீரியம்

(இ-ள்) மேற்கூறப்படுவன வாகிய பெயர்தாம் இ, உ, ஐ, ஓ, களையிறுதியாகிய நான்கு
பெயரும் உயர்திணைக்கண் விளியேற்குமென வறிக. (101)

இ, ஐ விளியேற்குமாறு

559. அவற்றுள்,
     இ, ஈ யாகும் ஐ, ஆ வாகும்.

(இ-ள்.) முற்கூறிய நான்கீற்றினுள் இ, ஈ யாயும் ஐ, ஆ வாயும் விளிக்குமென்க.

(வ-று.) நம்பி, நம்பீ; நங்கை, நங்காய். (102)

உ, ஓ விளியேற்குமாறு

560. உகரம் ஓகாரம் ஏயொடு சிவணும்.

(இ-ள்.) உ, ஓ, ஏ பெற்றுவிளிக்கும்.

(வ-று.) வேந்து, வேந்தே; கோ, கோவே. (103)

முற்கூறிய உகரம் குற்றியலுகரம் எனல்

561. உகரந் தானே குற்றிய லுகரம்.1

(இ-ள்.) முற்கூறிய வுகரமானது குற்றியலுகரமாம். (104)

உயர்திணைக்கண் பிற ஈறுகள் விளியேலாமை

562. உயர்திணை மருங்கினே னையவுயிர் விளியா.

(இ-ள்.) உயர்திணைக்கண் முற்கூறிய நான்கு ஈறுமல்லாத வுயிர் விளியேலாவா
மெனவறிக. (105)

அளபெடை மிகூஉம் இகரஇறு பெயர்

563. அளபெடை மிகூ மிகர விறுபெயர்
      இயற்கைய வாகு மென்மனார் புலவர்.

(இ-ள்.) அளபெடை தன்மாத்திரையின் மிக்கும் இகரவிறுதிப் பெய ரியல்பாய்
விளிக்குமென்க.

1. தொல் - சொல் - 123.