சொல்லதிகாரம்167முத்துவீரியம்

யகர ஈற்றயல் ஆ, ஓ ஆதல்

609. ஆயென் கிளவியு மவற்றோ ரற்றே.

(இ-ள்.) முன்னிலையீற்றுள், ஆயென்னும் ஈறு முற்கூறப்பட்டன போல ஆ,
ஓவாகுமென்க.

(வ-று.) ‘வந்தோய் மன்ற தெண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) (16)

குறிப்பாற் காலந் தோன்றுவன

610. உண்மையி னின்மையின் வன்மையி னன்மையின்
     வருவன காலங் குறிப்பாற் றோன்றும்.

(இ-ள்.) உண்மை, இன்மை, வன்மை, அன்மை யென்னும் பொருள்பற்றி வருவன
காலங் குறிப்பானறியப்படும்.

(வ-று.) உளன், இலன், வலன், அலன். (17)

குறிப்பு வினை

611. பன்மையு மொருமையும் பாலறி வந்த
    குறிப்புப் பொருண்மையைக் கொடுவரு வினைச்சொல்
    மேல்வரு முயர்திணை மருங்கிற் கூறிய
    தெரிநிலை வினையொடு சிவணு மென்ப.

(இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பால்விளக்கிக் குறிப்புப் பொருண்மையை
யுடையவாய்வரும் வினைச்சொல் மேல்வரும் உயர்திணைக்கட்கூறிய தெரிநிலை
வினையோடொக்கும்.

(வ-று.) கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியம், கரியாம்,
கரியெம், கரியேம், கரியென், கரியேன். (18)

அஃறிணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று

612. அ ஆ வகர விறுதிக் கிளவி
    அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சொல்லே.

(இ-ள்.) அகர, ஆகார, வகர மெய்யீறாகிய மொழிகள் அஃறிணைப் பன்மைப்
படர்க்கைச் சொல்லாம்.

(வ-று.) உண்டன, உண்ணா வருவ. (19)