சொல்லதிகாரம்168முத்துவீரியம்

அஃறிணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று

613. துடுறுக் குற்றிய லுகர வீற்ற
     அத்திணை யொன்றன் படர்க்கைச் சொல்லே.

(இ-ள்.) து, டு, றுக் குற்றியலுகரத்தை யீறாகிய மொழி யஃறிணை யொன்றன்பாற்
படர்க்கைச் சொல்லாம்.

(வ-று.) உண்டது, குறுந்தாட்டு, கூயிற்று எனவரும். (20)

எவன்

614. எவனென் வினாவே யிருபாற்கு முரிய.

(இ-ள்.) எவனென்னும் வினாச்சொல் மேற்கூறிய அஃறிணை யிருபாற்கு
முரியவாமென்க.

(வ-று.) அஃதெவன் அவையெவன். (21)

குறிப்புவினைச் சொற்கள்

615. இன்றில வுடைய வன்றுடைத் தல்ல
    என்பவும் பிறவும் வினைக்குறிப் பாகும்.

(இ-ள்.) இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல என்பவும் இவைபோல்வன
பிறவுங் குறிப்புவினைச் சொல்லாமென்க.

(வ-று.) கோடின்று, செவியில, தோடுடைய, அதுவன்று, கோடுடைத்து அவையல்ல.
(22)

இருதிணைப் பொதுவினை

616. வியங்கோள் முன்னிலை வினையெஞ்சு கிளவி
     செய்ம்மன வேறு செய்த செய்யும்
     ஒருகா லுயர்திணை யுணர்த்தி யொருகால்
     அஃறிணை யுணர்த்தியு மாயிரு திணைக்கும்
     ஒத்த வுரிமைய வாகு மென்ப.

(இ-ள்.) வியங்கோள், முன்னிலை, வினையெச்சம், செய்ம்மன, செய்த, செய்யும்,
வேறு ஆகிய வேழுசொல்லும், ஒருகாலுயர்திணை யுணர்த்தியும், ஒரு
காலஃறிணையுணர்த்தியும், இருதிணைக்கு மொத்த வுரிமையவாம்.