எழுத்ததிகாரம் | 17 | முத்துவீரியம் |
எழுத்துக்களின்
பிறப்பிடம்
43. உயிரிடை யின மிடறுரம் வலியுச்சி
மெலியிட மாமென வேண்டப்
படுமே.
(இ-ள்.) உயிர்
பன்னிரண்டிற்கும், இடையினம் ஆறுக்கும்
கழுத்திடமாகும். வல்லினம்
ஆறுக்கும்
நெஞ்சிடமாகும். மெல்லினம் ஆறுக்கும்
தலையிடமாகுமென்க.
(வி-ரை.)
‘‘ஆவி இடைமை இடம்மிட
றாகும்
மேவும் மேன்மைமூக்
குரம்பெறும் வன்மை’’ (எழுத்து - 20)
என்பர் நன்னூலார்.
மெல்லினம் ஆறும் மூக்கினிடமாகப் பிறக்கும் எனத்
(பிறப் - 18)
தொல்காப்பியரும், நன்னூலாரும் கூற இவ்வாசிரியர்
தலையிடமாகப் பிறக்கும் என்றல்
புதியதாகும் எனினும் தலையை இடமாகக் கொண்டு
எவ்வெழுத்தும் பிறப்பதில்லை யென்பர்
இக்காலத்து ஆய்வாளர்கள். (43)
அ, ஆ.
44. அவற்றுள்
அ, ஆ, வங்காப் பொடுவரு
மென்ப.
(இ-ள்.) அகரமும், ஆகாரமும்
வாயைத் திறத்தலால் பிறக்கும். (44)
இ, ஈ, எ, ஏ.
45. இ, ஈ, எ, ஏ, ஐயங்
காப்பொடு
மேல்வாய்ப் பல்லடி நாவிளிம் புறவரும்.
(இ-ள்.) இகர ஈகார, எகர
ஏகார, ஐகாரங்கள் வாயைத் திறத்தலோடு மேல்வாய்ப்
பல்லடியை நாவோரம் பொருந்தப்
பிறக்கும். (45)
உ, ஊ, ஒ, ஓ, ஒள.
46. 1உ, ஊ, ஒ, ஓ, ஒளவிதழ்
குவிவே.
(இ-ள்.) ஊகர உகார, ஒகர ஓகார ஒளகாரங்கள்
மேல் உதடும் கீழ்உதடும் குவிதலால்
பிறக்கும். (46)
1. நன் - எழுத் - 23.
|