எழுத்ததிகாரம்17முத்துவீரியம்

எழுத்துக்களின் பிறப்பிடம்

43. உயிரிடை யின மிடறுரம் வலியுச்சி
    மெலியிட மாமென வேண்டப் படுமே.

(இ-ள்.) உயிர் பன்னிரண்டிற்கும், இடையினம் ஆறுக்கும் கழுத்திடமாகும். வல்லினம்
ஆறுக்கும் நெஞ்சிடமாகும். மெல்லினம் ஆறுக்கும் தலையிடமாகுமென்க.

(வி-ரை.)

‘‘ஆவி இடைமை இடம்மிட றாகும்
மேவும் மேன்மைமூக் குரம்பெறும் வன்மை’’ (எழுத்து - 20)

என்பர் நன்னூலார். மெல்லினம் ஆறும் மூக்கினிடமாகப் பிறக்கும் எனத் (பிறப் - 18)
தொல்காப்பியரும், நன்னூலாரும் கூற இவ்வாசிரியர் தலையிடமாகப் பிறக்கும் என்றல்
புதியதாகும் எனினும் தலையை இடமாகக் கொண்டு எவ்வெழுத்தும் பிறப்பதில்லை யென்பர்
இக்காலத்து ஆய்வாளர்கள். (43)

அ, ஆ.

44. அவற்றுள்

அ, ஆ, வங்காப் பொடுவரு மென்ப.

(இ-ள்.) அகரமும், ஆகாரமும் வாயைத் திறத்தலால் பிறக்கும். (44)

இ, ஈ, எ, ஏ.

45. இ, ஈ, எ, ஏ, ஐயங் காப்பொடு
    மேல்வாய்ப் பல்லடி நாவிளிம் புறவரும்.

(இ-ள்.) இகர ஈகார, எகர ஏகார, ஐகாரங்கள் வாயைத் திறத்தலோடு மேல்வாய்ப்
பல்லடியை நாவோரம் பொருந்தப் பிறக்கும். (45)

உ, ஊ, ஒ, ஓ, ஒள.

46. 1உ, ஊ, ஒ, ஓ, ஒளவிதழ் குவிவே.

(இ-ள்.) ஊகர உகார, ஒகர ஓகார ஒளகாரங்கள் மேல் உதடும் கீழ்உதடும் குவிதலால்
பிறக்கும். (46)

1. நன் - எழுத் - 23.