சொல்லதிகாரம் | 171 | முத்துவீரியம் |
செய்யும் என்பது வாராத
விடம்
622. 1 பல்லோர் படர்க்கை
முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ்
செய்யுமென் முற்றே.
(இ-ள்.) பல்லோர் படர்க்கையினும்,
முன்னிலையினும் தன்மையினும், செய்யுமென்
முற்று நிலைபெறாவாமென்க.
(வ-று.) அவன் செய்யும்,
அவள் செய்யும், அது செய்யும், அவை செய்யும். (29)
வினையெச்சச் சொற்கள்
623. 2 செய்து செய்யூ செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய
செயின்செயச் செயற்கென
அவ்வகை யொன்பதும்
வினையெஞ்சு கிளவி.
(இ-ள்.) செய்து, செய்யூ, செய்பு, செய்தென,
செய்யியர், செய்யிய, செயின், செய,
செயற்கு ஒன்பதும் வினையெச்சச் சொல்லாம்.
(வ-று.) செய்து வந்தான்,
உண்ணூ வந்தான், நகுபு வந்தான்; சோலைபுக்கென வெப்பம்
நீங்கிற்று, உண்ணியர் வருவார், உண்ணிய
தந்தான், மழைபெய்யிற் குளநிறையும்,
உண்ணவந்தான், உணற்கு வந்தான் எனவரும். (30)
இதுவுமது
624. பின்முன் கால்கடை
யொடுவான் பானிடம்
அன்ன கிளவியு மவற்றியல்
பினவே.
(இ-ள்.) பின், முன், கால்,
கடை, வான், பான் ஈற்றவாய் வருவனவும் வினையெச்சமா
மென்க.
(வ-று.) கூதிர்போய்ப் பின்வந்தார், வருமுன் போயினார், நாடுங்கால்
வருவார்,
வருங்கடை செல்வார், வருவான் போவான்,
உண்பான் வந்தான் எனவரும். (31)
தம் வினை முதல்
வினையால் முடிவன
625. செய்து செய்யூ செய்பு வினைமுதல்
முடிபின வாகு மொழியுங்
காலே.
1. நன் - சொல் - வினை - 26.
2. தொல் - சொல் - வினை - 31.
|